காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ரோஹித் சர்மா சதம், ராயுடு அரை சதம்: இந்திய அணி ரன்கள் குவிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா சதமடித்துள்ளார்...

News image
Updated On :29 அக்டோபர் 2018, 10:50 am

எழில்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா சதமடித்துள்ளார்.

5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளன. மேலும் ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. புணேயில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரிஷப் பந்துக்குப் பதிலாக கெதர் ஜாதவும் சாகலுக்குப் பதிலாக ஜடேஜாவும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். மே.இ. அணியில் மெக்காய்க்குப் பதிலாக கீமோ பால் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணிக்கு  ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும் நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். ஆனால் நன்கு விளையாடி வந்த தவன் எதிர்பாராதவிதமாக 38 ரன்களில் கீமோ பால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மீண்டும் சதமடித்து உலக சாதனை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் எதிர்பாராதவிதமாக 16 ரன்களில் ரோச் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  இதனால் உலக சாதனை நிகழ்த்தும் வாய்ப்பை அவர் இழந்தார் கோலி. இந்தமுறையும் கோலியின் சதத்தையும் உலக சாதனையையும் எதிர்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள்.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மாவும் ராயுடுவும் பலமான கூட்டணி அமைத்தார்கள். ரோஹித் சர்மா 60 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இருவரும் முதலில் 60 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்தார். இதன்பின்பு, தொடர்ந்து நன்கு விளையாடி வந்த ரோஹித் சர்மா, 98 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் தனது 21-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ரோஹித் - ராயுடு கூட்டணி 99 பந்துகளில் 100 ரன்கள் கூட்டணி அமைத்தது. இதன்பிறகு ராயுடு 51 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.

இந்திய அணி 37 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 112, ராயுடு 52 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.