கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

யு.எஸ். ஓபன்: அரையிறுதியில் மோதும் வீரர்கள்!

யு.எஸ். ஓபன் போட்டியின் காலிறுதியில் மில்மேனைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார் ஜோகோவிச்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

யு.எஸ். ஓபன் போட்டியின் காலிறுதியில் மில்மேனைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார் ஜோகோவிச்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று இப்போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் ஜோகோவிச்சும் ஜான் மில்மேனும் மோதினார்கள். 5 முறை யு.எஸ். ஓபன் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை 4-வது சுற்றில் வீழ்த்தினார் ஆஸ்திரேலியாவின் மில்மேன். இதனால் இவர் பங்கேற்கும் காலிறுதி ஆட்டம் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் ஜோகோவிச் மில்மேனுக்கு வாய்ப்பு எதுவும் தராமல் 6-3, 6-4, 6-4 என நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். யு.எஸ். ஓபன் போட்டியில் 11-வது முறையாக அரையிறுதிச் சுற்றுக்குள் அவர் முன்னேறியுள்ளார்.

இதையடுத்து ஆடவர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றுக்கு நடால், டெல் பொட்ரோ, நிஷிகோரி, ஜோகோவிச் ஆகியோர் தகுதி பெற்றார்கள். நடால் - டெல் பொட்ரோ, ஜோகோவிச் - நிஷிகோரி என அரையுறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.