துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் 16 வயது செளரப் செளத்ரி தங்கம் வென்றுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் 16 வயது வீரர் செளரப் செளத்ரி தங்கம் வென்று அசத்தினார். இந்நிலையில் தென் கொரியாவின் சங்வோன் நகரில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை செய்துள்ளார்.
ஜூனியர் பிரிவின் 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 245.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றுள்ள செளரப் செளத்ரி, இதன்மூலம் புதிய ஜூனியர் உலக சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். இதே போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் சிங் சீமா வெண்கலம் வென்றுள்ளார்.