டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது ஏன்? தோனி விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதற்கான காரணத்தை மகேந்திர சிங் தோனி விளக்கியுள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:45 pm

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதற்கான காரணத்தை மகேந்திர சிங் தோனி விளக்கியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக் கேப்டனாக வலம் வந்த மகேந்திர சிங் தோனி, கடந்த 2014-இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, இந்திய அணியின் முழு நேர கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ராஞ்சியில் ஒருநிகழ்வில் பங்கேற்ற தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதற்கான விளக்கத்தை அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 

"2019 உலகக்கோப்பைக்கான அணியை உருவாக்க புதிய கேப்டனுக்கு போதிய அவகாசம் வழங்குவதற்காக எனது கேப்டன் பதவியை ராஜிநாமா செய்தேன். புதிய கேப்டனுக்கு உரிய காலம் வழங்காமல் வலுவான அணியை உருவாக்குவது சாத்தியமற்றது. அதனால், சரியான நேரத்தில் தான் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதாக நான் நம்புகிறேன். 

இங்கிலாந்து தொடருக்கு முன், இந்திய அணி பயிற்சிப் போட்டிகளை தவறவிட்டது. அதனால் தான், சூழ்நிலைக்கேற்ப தங்களை பொருத்திக் கொள்ள பேட்ஸ்மேன்கள் திணறினர். இது விளையாட்டின் ஒரு பகுதி. ஐசிசி தரவரிசையில் இந்திய அணி தற்போது முதலிடம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.