மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், பிசிசிஐ (போர்டு பிரசிடெண்ட் லெவன்) அணிக்கும் இடையிலான பயிற்சி ஆட்டம் வதோதராவில் இன்று தொடங்கியுள்ளது. 2 நாள்கள் மட்டுமே இந்த ஆட்டம் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற பிசிசிஐ அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிருத்வி ஷா, 8 ரன்களில் ஆட்டமிழந்தார். நல்ல ஃபார்மில் இருக்கும் மயங்க் அகர்வால், 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு ஷ்ரேயஸ் ஐயர் 61 ரன்கள் எடுத்தார். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 25 வயது அங்கித் பாவ்னே, சிறப்பாக விளையாடி சதமெடுத்தார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் போர்டு பிரசிடெண்ட் லெவன் அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்துள்ளது. அங்கித் பாவ்னே 116, ஜலஜ் சக்ஸேனா 18 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். மே.இ. அணித் தரப்பில் பிஷூ 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, அக்டோபர் 4-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கவுள்ளது.