2021-ல் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. இதில் இந்திய அணி இரு பகலிரவு டெஸ்ட் ஆட்டங்களில் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.
அடிலெய்ட், பிரிஸ்பேன், பெர்த் ஆகிய மைதானங்களில் ஏதேனும் இரண்டு இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் இரு டெஸ்டுகளை நடத்தும். அந்த இரண்டிலும் பகலிரவு டெஸ்ட் ஆட்டங்களை நடத்த வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐயுடன் ஜனவரியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டால், இரு பகலிரவு டெஸ்டுகள் நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் என்கிற பெருமையும் இதற்குக் கிடைக்கும்.
சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இன்னிங்ஸ் வெற்றியை அடைந்தது இந்திய அணி. இதையடுத்து இந்தியாவில் இனி நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் கட்டாயம் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மரக்கன்று நடுவோம்...

ரயில்வேயில் ஆள்குறைப்பு நடவடிக்கை கூடாது: இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

பாக்கெட் நாவல் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


