பாக்கெட் நாவல் திரைப்பட அனுபவம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் பேசியுள்ளார்.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் “பாக்கெட் நாவல்”.
தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் (TDKF) மூலம் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
நடிகர்கள் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய மாளவிகா மோகனன், “பாக்கெட் நாவல் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மகிழ்ச்சியாக உருவாக்கி வருகிறோம். இப்படக்குழுவினருடன் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது. இந்தாண்டு இறுதியில் வெளியாகவுள்ளதால் படத்திற்காக ஆவலாக காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Actress Malavika Mohanan has spoken about her experience working on the film Pocket Novel
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அழகான ஒட்டகச் சிவிங்கியே... மாளவிகா மோகனன் பகிர்ந்த புகைப்படம்!

வாழ்க்கையில் மறக்க முடியாத கதாபாத்திரம்... திருநங்கை அனுஸ்ரீ வேலன் நெகிழ்ச்சி!

த்ரிஷா போல விஜய்யுடன் பயணிப்பீர்களா? கண்டனம் தெரிவித்த மாளவிகா மோகனன்!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope




