மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஐபிஎல் ஏலத்திலிருந்து சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் விலகல்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணியில்... 

News image
Updated On :14 டிசம்பர் 2019, 5:23 am

எழில்

வரும் டிசம்பா் 19-ஆம் தேதி முதன்முறையாக கொல்கத்தாவில் ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் 332 வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. 

ஐபிஎல் 2019 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற 5 வீரர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்கள். அவர்களில், இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸும் ஒருவர். இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகியுள்ளார் சாம் பில்லிங்ஸ். மேலும் அடுத்தச் சில மாதங்களுக்கு எந்தவொரு டி20 போட்டியிலும் விளையாடுவதில்லை என அவர் முடிவெடுத்துள்ளார். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணியில் சாம் பில்லிங்ஸ் இடம்பெறவில்லை. இதனால் கெண்ட் கவுண்டி அணிக்காக அடுத்த ஒரு வருடம் விளையாடி தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.