இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.
இதையடுத்து ஆண்ட்ரூ டை ஆஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்துமுடிந்த பிபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் (24 விக்கெட்டுகள்) என்கிற பெருமையைப் பெற்றார் கேன் ரிச்சர்ட்சன்.
ஒருநாள் தொடருக்காக ஷான் மார்ஷும் ஆண்ட்ரூ டையும் இந்தியாவுக்கு வரவுள்ளார்கள். மார்ச் 2 முதல் ஒருநாள் தொடர் தொடங்கவுள்ளது.