காயம் காரணமாக ஆஸி. வீரர் விலகல்! ஆண்ட்ரூ டை அணியில் சேர்ப்பு!

ஒருநாள் தொடருக்காக ஷான் மார்ஷும் ஆண்ட்ரூ டையும் இந்தியாவுக்கு வரவுள்ளார்கள்..
காயம் காரணமாக ஆஸி. வீரர் விலகல்! ஆண்ட்ரூ டை அணியில் சேர்ப்பு!
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார். 

இதையடுத்து ஆண்ட்ரூ டை ஆஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்துமுடிந்த பிபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் (24 விக்கெட்டுகள்) என்கிற பெருமையைப் பெற்றார் கேன் ரிச்சர்ட்சன். 

ஒருநாள் தொடருக்காக ஷான் மார்ஷும் ஆண்ட்ரூ டையும் இந்தியாவுக்கு வரவுள்ளார்கள். மார்ச் 2 முதல் ஒருநாள் தொடர் தொடங்கவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com