மழை பாதிப்பு: தாமதமாகத் தொடங்கிய 4-ஆம் நாளில் ஆஸி.க்கு மேலும் சறுக்கல்

இந்தியா, ஆஸி. இடையிலான 4-ஆவது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
மழை பாதிப்பு: தாமதமாகத் தொடங்கிய 4-ஆம் நாளில் ஆஸி.க்கு மேலும் சறுக்கல்
Updated on
1 min read

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் சிட்னியில் வியாழக்கிழமை தொடங்கியது. 

இப்போட்யில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா 193, ரிஷப் பந்த் 159 ரன்களை குவித்தனர். 

தொடர்ந்து ஆடிய ஆஸி. அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. இதனிடையே, மழை குறுக்கிட்டதாலும், போதிய வெளிச்சமின்மை காரணமாகவும் ஆட்டத்தை தொடர முடியாமல் போகவே, நடுவர்கள், கேப்டன்களுடன் ஆலோசித்து மூன்றாம் நாள் ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், மழை தொடர்ந்ததால் 4-ஆம் நாள் ஆட்டம் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போட்டி நடைபெறுவதில் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் தொடங்கிய 4-ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸி. மேலும் ஒரு விக்கெட்டைப் பறிகொடுத்தது. 

தற்போது வரை ஆஸி. அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி ஆஸி.யை விட 386 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த 1947-48-இல் முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி இதுவரை ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. தற்போது அந்த சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com