இந்திய அணியில் மாற்றம்: தமிழக வீரர், யு-19 நட்சத்திரம் சேர்ப்பு

பாண்டியா, ராகுலுக்கு பதிலாக இந்திய அணியில் இளம் வீரர்கள் விஜய் ஷங்கர், ஷுப்மன் கில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் மாற்றம்: தமிழக வீரர், யு-19 நட்சத்திரம் சேர்ப்பு
Updated on
1 min read

பாண்டியா, ராகுலுக்கு பதிலாக இந்திய அணியில் இளம் வீரர்கள் விஜய் ஷங்கர், ஷுப்மன் கில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய ஹார்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆஸி. எதிரான ஒருநாள் தொடரில் மேலும் 2 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், அணியில் மாற்றங்கள் செய்ய பிசிசிஐ முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை பிசிசிஐ சனிக்கிழமை வெளியிட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் ஷங்கர், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து தொடர்களில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 2-ஆவது ஒருநாள் போட்டிக்குள்ளாக இந்திய அணியுடன் இணைய உள்ளார்.

இந்நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சாதித்து வரும் மற்றொரு இளம் வீரர் ஷுப்மன் கில், நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com