இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக இந்த உலகக் கோப்பையில் திகழும் வீரர் தொடர்பாக முன்னாள் கேப்டன் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறையிலும் முழுமையாகச் செயல்பட்டது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 312 ரன்கள் வரை எடுத்திருக்கக் கூடும். ஆனால், ஹார்திக் பாண்டியாவின் அதிரடியால் தான் 352 ரன்கள் குவிக்க முடிந்தது. இந்த வெற்றிகளின் மூலம் நடப்பு உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் அமைந்துள்ளது.
ஆஸி.யுடனானப் போட்டியில் ஹார்திக் பாண்டியாவின் ஆட்டம் தான் திருப்புமுனையாக அமைந்தது. இந்த தொடரின் இறுதியில் பாண்டியா அதிக விக்கெட்டுகளையும் நிச்சயம் வீழ்த்துவார் என்று நம்புகிறேன்.
மேலும் ஹார்திக் போன்ற வீரர் ஆஸி. அணியில் இடம்பெறவில்லை. இங்கிலாந்து அணியில் இதுபோன்ற தரமான ஆல்-ரவுண்டர்கள் பலர் உள்ளனர். மேலும் நியூஸிலாந்து அணியுடனான ஆட்டமும் சவால் நிறைந்ததாக இருக்கும். ஆஸி. உடனான போட்டியின் மூலம் ஹார்திக் பாண்டியாவுக்கு தன்னம்பிக்கை மேம்பட்டிருக்கும்.
அதுமட்டுமல்ல இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவின் முக்கிய வீரராகவும் ஹார்திக் பாண்டியா திகழ்வார் என்று குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


