2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தன்னடக்க தோனி: தன் பெயர் சூட்டப்பட்ட பெவிலியனைத் திறந்து வைக்க மறுப்பு!

ராஞ்சி மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது...

News image
Updated On :7 மார்ச் 2019, 5:41 am

எழில்

மும்பை வான்கடே ஸ்டியேயத்தில் கவாஸ்கர் பெயரில் ஒரு மாடமும், தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லாவில் சேவாக் கேட்டும் உள்ளதுபோல ராஞ்சி மைதானத்தில் உள்ள பெவிலியன் பகுதிக்கு தோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

2017-ல் நடந்த நிர்வாகக் கூட்டத்தில், வடக்கு பிளாக் ஸ்டாண்ட் பகுதிக்கு தோனியின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது என்று கூறுகிறார் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க செயலர் தெபசிஸ் சக்ரபோர்தி. தோனி பெவிலியனைத் திறந்து வைக்க தோனியை அழைத்தோம். ஆனால், நானும் இந்த மைதானத்துடன் தொடர்புடையவன். என்னுடைய வீட்டை நானே திறந்துவைப்பதா எனத் தன்னடக்கத்துடன் மறுத்துவிட்டார் என்று அவர் கூறியுள்ளார். 

ராஞ்சி மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. ராஞ்சியில் தோனி விளையாடும் கடைசி ஒருநாள் ஆட்டம் இது என்று கூறப்படுகிறது. எனினும் இதற்கென விசேஷ நிகழ்ச்சிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.