கிரிக்கெட்டின் முதல் போட்டி நடுவராக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி (51) தேர்வு செய்யப்பட்டுள்ளார். லட்சுமியை நியமித்து ஐசிசி சர்வதேச நடுவர் குழு செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது. இதையடுத்து போட்டி நடுவராக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
2008-09 சீசனில் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் ஜி.எஸ்.லட்சுமி நடுவராக செயல்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சர்வதேசப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கும் நடுவராக பணியாற்றியுள்ளார். இதுகுறித்து லட்சுமி கூறியதாவது:
ஐசிசி-யின் சர்வதேச நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். இந்திய கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் விளையாடியுள்ளேன். அதுபோன்று கள நடுவராகவும் செயல்பட்டுள்ளேன். ஒரு வீரராகவும், கள நடுவராகவும் நான் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் சர்வதேச போட்டிகளிலும் சிறந்த போட்டி நடுவராக செயல்படுவேன் நம்பிக்கை உள்ளது.
இந்த தருணத்தில் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில், பிசிசிஐ மற்றும் எனது மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


