நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

என் சகோதரி என்னைத் தாக்கி பணம் கேட்டு மிரட்டுகிறார்: ஓரினச் சேர்க்கையாளராக  அறிவித்த ஓட்டப்பந்தய வீராங்கனை பேட்டி  

என் சகோதரி என்னைத் தாக்கி ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டுகிறார் என்று தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்த ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 மே 2019, 8:51 pm IST

புபனேஷ்வர்: என் சகோதரி என்னைத் தாக்கி ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டுகிறார் என்று தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்த ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த் தெரிவித்துள்ளார்.

ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் துத்தி சந்த். பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனையான இவர் இந்தியா சார்பாக 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், 100 மீ மற்றும் 200 மீ போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்.

தற்போது அவர் சர்வதேச தடகளப் போட்டிகளுக்கும், அது முடிந்த பின்னர் 2020-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தயாராகி வருகிறார்.

இந்நிலையில் நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன் என்று துத்தி சந்த் வெளிப்படையாக கடந்த ஞாயிறன்று அறிவித்தார்.

இதுதொடர்பாக ஆங்கில செய்தித்தாள் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளவது:

எனக்கு ஆத்ம துணையாக இருக்கக்கூடிய ஒருவரை நான் கண்டடைந்துள்ளேன். ஒடிஷா மாநிலத்தில் எனது சொந்த ஊரான சக்கா கோபாலபுரில் உள்ள ஒரு பெண்ணை நான் விரும்புகிறேன். ஒவ்வொருவரும் தாங்கள் யாரை விரும்புகிறார்களோ, அவர்களுடன் வாழவதற்கான சுதநதிரம் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். தன் பாலின உறவை மேற்கொள்வோர்களின்  உரிமைகளை எப்போதுமே நான் ஆதரித்து வந்துள்ளேன். அது தனிப்பட்ட ஒருவரின் உரிமையாகும்.

தற்போது என்னுடைய குறிக்கோள் எல்லாம் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பின்னர் ஒலிம்பிக் போட்டிகளிலும்தான் உள்ளது.  ஆனால் நான் இறுதியாக அவளுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்.        

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் என் சகோதரி என்னைத் தாக்கி ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டுகிறார் என்று துத்தி சந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புபனேஷ்வரில் செய்தியாளர்களிடம் செவ்வாயன்று பேசிய அவர் கூறியதாவது:

எனது சொந்த சகோதரி சரஸ்வதி என்னை மிரட்டுகிறார். என்னிடம் ரூ.25 லட்சம் கேட்டார். ஒரு முறை அவர் என்னை அடித்து துன்புறுத்தினார். இது குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளேன். அவர் என்னை மிரட்டியதன் காரணமாகவே எனது உறவு குறித்து வெளியே கூற  நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவரது சகோதரி சரஸ்வதி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,   'துத்தியின் காதலியான அந்தப் பெண் குடும்பத்தினர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தந்த அழுத்தம் காரணமாகவே துத்தி இதுகுறித்து வெளியே கூறியுள்ளார். அவரது சொத்துக்களை அபகரிக்கவே இப்படி அவர்கள் செயல்படுகின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.