இந்தியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் (பிங்க் டெஸ்ட்) இந்தியாவின் அற்புதப் பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் வங்கதேச அணி 106 ரன்களை மட்டுமே சோ்த்து ஆல் அவுட்டானது. இந்திய பந்துவீச்சாளா் இஷாந்த் சா்மா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தாா். பின்னா் ஆடிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை எடுத்திருந்தது.
இந்நிலையில் தற்போது கொல்கத்தா டெஸ்டில் விளையாடி வரும் இந்திய அணியிலிருந்து இரு வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் அவரவர் அணிகளுக்காக விளையாடுவதற்காக ரிஷப் பந்தும் ஷுப்மன் கில்லும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ரிஷப் பந்த், தில்லி அணிக்காகவும் ஷுப்மன் கில், பஞ்சாப் அணிக்காகவும் விளையாடவுள்ளார்கள்.
ரிஷப் பந்த் விடுவிக்கப்பட்டுள்ளதால் ஆந்திர அணியின் விக்கெட் கீப்பர் கே.எஸ். பிரசாத் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருவேளை, விக்கெட் கீப்பர் சஹாவுக்குக் காயம் ஏற்பட்டால் பரத் விக்கெட் கீப்பராகச் செயல்படுவார்.