6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேகேஆர் ஐபிஎல் அணியில் இணைந்த இரு முன்னாள் வீரர்கள்!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமை ஆலோசகராக முன்னாள் வீரர் டேவிட் ஹஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :5 அக்டோபர் 2019, 10:20 am

எழில்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமை ஆலோசகராக முன்னாள் வீரர் டேவிட் ஹஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல நியூஸிலாந்தின் முன்னாள் வீரர் கைல் மில்ஸ், பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இருவரும் கேகேஆர் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரான பிரண்டன் மெக்கலமுடன் இணைந்து பணியாற்றுவார்கள். டேவிட் ஹஸ்ஸி, கேகேஆர் அணியில் 2008-10 காலக்கட்டங்களில் விளையாடியுள்ளார். மில்ஸ், நியூஸிலாந்து அணிக்காக 19 டெஸ்டுகள், 170 ஒருநாள், 42 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல் 5 ஆட்டங்களில் நான்கில் வெற்றியடைந்தது கேகேஆர் அணி. பிறகு தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. பிறகு அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் வென்றது. எனினும் கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றுப்போனதால் பிளேஆஃப் ஆட்டங்களில் தகுதி பெறாமல் போய்விட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.