ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அந்த நாள் ஞாபகம்..!

2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில், செப்டம்பர் 19-ஆம் தேதி, குரூப் பிரிவு ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்தை எதிர்கொண்டு இந்தியா விளையாடிது. 

News image
Updated On :19 செப்டம்பர் 2019, 7:44 pm

DIN


2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில், செப்டம்பர் 19-ஆம் தேதி, குரூப் பிரிவு ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்தை எதிர்கொண்டு இந்தியா விளையாடிது. 
19ஆவது ஓவரை ஸ்டூவர்ட் பிராட் வீசினார். அந்த ஓவரில் அனைத்து பந்துகளையும் பவுண்டரி எல்லைக்கு வெளியே பறக்கவிட்டார் யுவராஜ் சிங். மறுமுனையில் அவருடன் தோனி இருந்தார். 
அந்த ஆட்டத்தில் 12 பந்துகளில் அரை சதமும் பதிவு செய்தார் யுவராஜ். அந்த நாளைக் கொண்டாடும் வகையில் பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் 6 சிக்ஸர்களை பறக்கவிடும் யுவராஜின் புகைப்படங்களை வெளியிட்டு கௌரவம் செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாளாயிற்றே! அந்த ஆட்டத்தில் மட்டுமல்ல; அந்த உலகக் கோப்பையையும் இந்திய அணியே வென்றது.
கடந்த ஜூன் 10ஆம் தேதி அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் யுவராஜ்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.