ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தஞ்சாவூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் தொடக்கம்

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
போட்டியில் பங்கேற்ற வீரர்கள்.
Updated On :20 செப்டம்பர் 2019, 7:47 pm

DIN


தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகளை சர்வதேச குத்துச்சண்டை வீரர் சி. லட்சுமிகாந்தன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சனிக்கிழமை வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை,  திருச்சி,  தஞ்சாவூர்,  திருவாரூர்,  கோவை,  திண்டுக்கல் உள்பட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 243 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் 46 கிலோ முதல் 100 கிலோ வரை மொத்தம் 10 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெறுகின்றன. நடுவர்களாக சென்னை  டி.ஆர். சக்திவேல்,  மோகன்,  புதுச்சேரி பாலா ஆகியோர் உள்ளனர். வெற்றி பெறும் வீரர்களுக்கு சனிக்கிழமை மாலை பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
இந்தப் போட்டிகளில் பத்து வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்கள் அக்டோபர் முதல் வாரத்தில் சிம்லாவில் இந்திய குத்துச்சண்டை கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட குத்துச்சண்டை கழகச் செயலாளர் ஜி. ஜலேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.