நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜோஃப்ரா ஆர்ச்சர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்: கேப்டன் ஜோ ரூட் பெருமிதம்

வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பெருமிதம் தெரிவித்தார்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2019, 7:59 am

Raghavendran

வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பெருமிதம் தெரிவித்தார்.

2-ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆர்ச்சரின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய வீரர்களை திணறடித்தது. குறிப்பாக துல்லிய பௌன்சர்கள் ஆஸி. வீரர்களை மிரட்டியது. ஸ்டீவ் ஸ்மித் போன்ற முன்னணி பேட்ஸ்மேன் கூட ஆர்ச்சரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பயந்தது இந்தப் போட்டியின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் பெருமிதம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இங்கிலாந்து பந்துவீச்சு முறையில் புதிய கோணத்தை ஆர்ச்சர் ஏற்படுத்தியுள்ளார். இதனால் ஆஸி. அணி அவரை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்களை கையாள வேண்டியிருந்தது. இதுவரை இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களில் இருந்து ஆர்ச்சர் சற்று வித்தியாசமனவராக உள்ளார். அதிலும் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் ஆர்ச்ரை எதிர்கொள்ள எதிரணிக்கு சிறப்பு திறன் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.