சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

ஃபீல்டிங்கில் கோட்டையைப் பிடித்த இந்தியாவும்! கோட்டை விடும் பாகிஸ்தானும்!

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் சிறந்த ஃபீல்டிங் அணியாக இந்தியா திகழ்வதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2019, 10:13 am

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் சிறந்த ஃபீல்டிங் அணியாக இந்தியா திகழ்வதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு தொடரில் இதுவரையிலான ஆட்டங்களின் அடிப்படையில் ஃபீல்டிங்கில் சிறந்த அணியாக இந்தியாவும், மோசமான அணியாக பாகிஸ்தானும் உள்ளது.

Story image

பாகிஸ்தானுக்கு எதிராக யுவேந்திர சாஹல் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் மட்டும் ஒரேயொரு கேட்சை தவறவிட்டார். மற்றபடி இந்திய அணி 14 கேட்சுகளையும் பிடித்து அசத்தியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணி சுமார் 14 கேட்சுகளை கோட்டை விட்டுள்ளது. இது அந்த அணிக்கு ஏற்பட்ட கேட்சு வாய்ப்புகளில் 35 சதவீதமாகும்.

Story image

இதில் அதிர்ச்சிக்குரிய விதமாக இங்கிலாந்து அணி மோசமான ஃபீல்டிங் பட்டியலில் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த அணி ஆஸ்திரேலிய அணியுடனான போட்டிக்கு முன்னதாக வரை 12 கேட்சுகளை நழுவவிட்டனர். நியூஸிலாந்து அணி 9 கேட்சு வாய்ப்புகளை தவறவிட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.