தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பங்கால் அபாரம்

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய நட்சத்திர வீரரும், ஆசிய சாம்பியனுமான அமித் பங்கால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

News image
Updated On :15 செப்டம்பர் 2019, 12:54 am IST

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய நட்சத்திர வீரரும், ஆசிய சாம்பியனுமான அமித் பங்கால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெறும் இப்போட்டியில் 50-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவும் இப்போட்டிக்கு வலுவான அணியை அனுப்பியுள்ளது. ஆசியப் போட்டி சாம்பியன் அமித் பங்கால் 52 கிலோ பிரிவில் சீன தைபேயின் டு போ வெயை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
23 வயதான அமித் தொடக்கம் முதலே ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி சரமாரியாக குத்துகளை விட்டார். முதல் சுற்றில் அமித்துக்கு பை வழங்கப்பட்டது.
57-63 கிலோ பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கெளஷிக் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் டச்சு வீரர் லாக்ரûஸ வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.