சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அடுத்த ஒரு வருடத்துக்கு கிரிக்கெட் கிடையாது: சோயிப் அக்தர் கணிப்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அடுத்த ஒரு வருடத்துக்கு கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெற வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 10:03 am

DIN


கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அடுத்த ஒரு வருடத்துக்கு கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெற வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 18,600 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தன்னுடைய யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ள விடியோவில் அவர் கூறியுள்ளதாவது:

கரோனா பாதிப்பு இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் எனத் தெரியாது. கரோனாவால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்கிற முழு விவரமும் தெரியாமல் கிரிக்கெட் ஆட்டங்களை ஆரம்பிக்க முடியாது.

கரோனா வைரஸ் தொற்றால் அடுத்த ஒரு வருடத்துக்கு கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறாது என நினைக்கிறேன். நம்மை ஒரு வருடத்துக்கு கரோனா வைரஸ் தொந்தரவு செய்யும். இந்தச் சோதனைக் காலகட்டத்திலிருந்து நாம் மீண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.