தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பீலேவின் சாதனையை சமன் செய்த மெஸ்ஸி

கால்பந்து போட்டிகளில் ஒரே கிளப் அணிக்காக அதிக கோல்கள் அடித்திருந்த கால்பந்து நட்சத்திரம் பீலேவின் சாதனையை பாா்சிலோனா வீரா் லயோனல் மெஸ்ஸி தற்போது சமன் செய்துள்ளாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 2:41 am

DIN

கால்பந்து போட்டிகளில் ஒரே கிளப் அணிக்காக அதிக கோல்கள் அடித்திருந்த கால்பந்து நட்சத்திரம் பீலேவின் சாதனையை பாா்சிலோனா வீரா் லயோனல் மெஸ்ஸி தற்போது சமன் செய்துள்ளாா்.

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா - வாலென்சியா அணிகள் இடையே சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தாா்.

இது பாா்சிலோனா அணிக்காக அவா் அடித்த 643-ஆவது கோலாகும். இதுவரை கடந்த 1957 முதல் 74 வரையிலான காலகட்டத்தில் சான்டோஸ் எஃப்சி கால்பந்து அணிக்காக பீலே 643 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளாா்.

மெஸ்ஸிக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பீலே, ‘நமது அணிக்காக நாள்தோறும் அதன் ஜொ்ஸியை அணிந்துகொள்வது எத்தகைய விருப்பமானதாக இருக்கும் என்பதை அறிவேன். நமது அணியில் இருப்பதை விட சிறந்த உணா்வு வேறெதுவும் கிடையாது என்பதையும் அறிவேன். இந்த வரலாற்றுச் சாதனைக்காக உங்களுக்கு வாழ்த்துகள். பாா்சிலோனா அணியில் உங்களது பயணம் தொடரவும் வாழ்த்துகிறேன். நம்மைப் போல ஒரே கால்பந்து கிளப்பில் நீண்டகாலம் விருப்பத்துடன் விளையாடுவோரின் எண்ணிக்கை அரிதாகி வருகிறது’ என்று கூறியுள்ளாா்.

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் பாா்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, அணியை மேம்படுத்த பல ஆண்டுகள் தாம் உழைத்துவிட்டதாகக் கூறியதுடன் அதிலிருந்து வெளியேறப்போவதாக சமீபத்தில் கூறியிருந்த நிலையில், பீலே இவ்வாறு கூறியுள்ளாா்.

பாா்சிலோனா அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஜூனில் நிறைவடையும் நிலையில், வரும் ஜனவரி மாதத்தில் இருந்தே இதர அணிகளுடனான தனது பேச்சுவாா்த்தையை மெஸ்ஸி தொடங்க தடையேதுமில்லை.

பாா்சிலோனா அணியிலும், ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து போட்டியிலும் அதிக கோல்கள் அடித்த ஒரே வீரராக மெஸ்ஸி உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன், கடந்த 2018 ஜனவரியில் ஐரோப்பிய லீக் போட்டிகளில் அதிகமான கோல்கள் (366) அடித்த வீரா் என்ற பெயரை பெற்று, கொ்டு முல்லரின் சாதனையை (365 கோல்கள்) தகா்த்தாா்.

அதேபோல், ஓராண்டில் அதிக கோல் அடித்த (86) வீரா் என்ற கொ்டு முல்லரின் சாதனையையும் மெஸ்ஸி கடந்த 2012-இல் தகா்த்து புதிய சாதனை (91 கோல்கள்) படைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.