தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மெல்போர்ன் டெஸ்ட் முதல் நாள்: இந்திய அணிக்கு விராட் கோலி பாராட்டு

மெல்போர்ன் டெஸ்டின் முதல் நாளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 9:05 am

DIN

மெல்போர்ன் டெஸ்டின் முதல் நாளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. 

2-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்குச் சுருட்டிய இந்திய அணி, முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. பும்ரா 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.

இந்திய அணி முதல் நாளில் விளையாடிய விதத்தைப் பாராட்டியுள்ளார் விராட் கோலி. ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நமக்கு அற்புதமான முதல் நாள். பந்துவீச்சாளர்கள் அபாரமாக விளையாடியுள்ளார்கள். முதல் நாள் ஆட்டத்தை நன்கு முடித்துள்ளோம் என்றார். 

முதல் குழந்தை பிறக்கும்போது மனைவி அனுஷ்கா சர்மாவுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் டெஸ்டை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார் விராட் கோலி. இதனால் டெஸ்ட் தொடரின் மீதமுள்ள மூன்று டெஸ்டுகளுக்கும் ரஹானே கேப்டனாகச் செயல்படவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.