பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

நியூஸிலாந்து வீரர்கள் அருமையானவர்கள், பழி வாங்க முடியாது: விராட் கோலி

உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியில் தோற்கடித்ததற்காக நியூஸிலாந்து அணியைப் பழிவாங்கவேண்டும் என...

News image
Updated On :23 ஜனவரி 2020, 10:15 am

இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஆக்லாந்தில் நாளை தொடங்குகிறது. 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியில் தோற்கடித்ததற்காக நியூஸிலாந்து அணியைப் பழிவாங்கவேண்டும் என நினைக்கவில்லை. நியூஸிலாந்து வீரர்கள் அருமையானவர்கள். அந்த எண்ணமே தோன்றாது. 

ஆனால், போட்டி மனப்பான்மையுடன் விளையாடுவோம். சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு நியூஸிலாந்து வீரர்கள் சிறந்த உதாரணம். அதனால் தான் உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு அவர்கள் தகுதியடைந்தபோது மகிழ்ச்சி அடைந்தோம் என்று கூறினார்.

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்தியா, போட்டியிலிருந்து வெளியேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.