டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: ஐபிஎல் தலைவர்

​கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020-ம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார்.

News image
​கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020-ம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார்.
Updated On :21 ஜூலை 2020, 1:55 pm

DIN


கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020-ம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதன் காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது பொது முடக்கம் தளர்த்தப்பட்டு வருவதால், மீண்டும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாக இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருவதால், இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியா அல்லாது வெளிநாடுகளில் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

எனினும், இந்த ஆண்டு ஐசிசியின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரும் நடைபெறவிருந்ததால், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கான அட்டவணையில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, டி20 உலகக் கோப்பை நடத்துவது பற்றிய ஐசிசியின் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக பிசிசிஐ காத்திருந்தது. இந்தச் சூழலில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த 2020-ம் ஆண்டின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி நேற்று அறிவித்தது. எனவே, ஐபிஎல் தொடர் குறித்த பிசிசிஐயின் அதிகாரபூர்வ அறிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், 2020-ம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது:

"கரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020-ம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. அரசின் அனுமதியைக் கோரியிருக்கிறோம். இதுபற்றி மேலும் ஐபிஎல் ஆட்சிக் குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்." என்றால் பிரிஜேஷ் படேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.