தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா அச்சுறுத்தலால் ரத்தாகவுள்ள 2020 விம்பிள்டன் போட்டி

கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி ரத்தாகவுள்ளது.

News image
Updated On :31 மார்ச் 2020, 5:01 am

கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி ரத்தாகவுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 37,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 1200 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி ரத்தாகவுள்ளது.

ஜெர்மன் டென்னிஸ் சங்கத்தின் துணைத்தலைவர் அளித்த பேட்டியில், இந்த வருட விம்பிள்டன் போட்டியை ரத்து செய்வது குறித்த முடிவு புதன்கிழமை எடுக்கப்படும். இதில் சந்தேகமேயில்லை. இன்றைய சூழலில் இது அவசியமானது. பயணக்கட்டுப்பாடுகள் நிலவும் நிலையில் உலகம் முழுவதும் இருந்து வீரர்களும் ரசிகர்களும் லண்டனுக்கு வருவார்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

மே மாதம் நடைபெறுவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி, செப்டம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல ஜுன் 29 அன்று தொடங்குவதாக இருந்த விம்பிள்டன் போட்டியை ஒத்திவைக்க முடியாது, இதனால் உலகப் போர்களுக்காக அல்லாமல் வேறு காரணத்துக்காக முதல்முறையாக விம்பிள்டன் ரத்து செய்யப்படுகிறது. முதலாம் உலகப் போரினால் 1915-18 வரை விம்பிள்டன் நடைபெறவில்லை. இரண்டாம் உலகப் போரினால் 1940-45 வரை மீண்டும் ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.