ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

என் தந்தையின் கனவை நிறைவேற்றுவேன்: சிராஜ் உறுதி

இந்திய அணிக்காக விளையாடி நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்கிற எனது தந்தையின் கனவை...

News image
தந்தை, தாயுடன் சிராஜ்
Updated On :23 நவம்பர் 2020, 12:08 pm

DIN

இந்திய அணிக்காக விளையாடி நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்கிற எனது தந்தையின் கனவை நிறைவேற்றுவேன் என வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் கூறியுள்ளார்.

26 வயது சிராஜ் இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் ஆட்டத்திலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு விளையாடி வருகிறார்.

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள சிராஜ், ஆஸ்திரேலியாவில் தற்போது அணியினருடன் இணைந்து பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சிராஜின் தந்தை முகமது கோஸ் (53), நுரையீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் மரணமடைந்தார். 

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்திய வீரர்கள் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். எனினும் அனுமதிக்கப்பட்ட பகுதியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தந்தை மரணமடைந்த நிலையிலும் கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் சிராஜால் இந்தியாவுக்குத் திரும்பி, தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனது. 

தந்தையை இழந்தது பற்றி பிசிசிஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் சிராஜ் கூறியதாவது: 

தந்தையின் மரணம் எனக்குப் பெரிய இழப்பு. அவர் தான் எனக்கு ஆதரவு அளித்தவர். இந்திய அணிக்காக விளையாடி நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். தந்தையின் கனவை நிறைவேற்றுவேன். 

உயிருடன் இல்லாவிட்டாலும் அவர் என் இதயத்தில் வாழ்கிறார். என் அம்மாவிடம் பேசினேன். என் தந்தையின் கனவை எனக்கு நினைவூட்டினார். இந்திய அணிக்காக நன்கு விளையாட வேண்டும் என்று சொன்னார். 

ஒரு குடும்பம் போல இச்சூழலில் என் அணியினர் எனக்கு ஆதரவளித்தார்கள். இத்தருணத்தில் வலிமையுடன் இருந்து என் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என கேப்டன் கோலி ஊக்கப்படுத்தினார் என்று பேட்டியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.