இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு கரோனா பாதிப்பு

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதைப் பெற்றார்...

News image
Updated On :17 செப்டம்பர் 2020, 12:08 pm

DIN

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் வில்லி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி20 பிளாஸ்ட் போட்டியில் யார்க்‌ஷைர் அணியில் இடம்பெற்றுள்ளார் டேவிட் வில்லி. இந்நிலையில் வில்லி உள்ளிட்ட நான்கு வீரர்கள் தனிமைப்படுத்துள்ளதாக யார்க்‌ஷைர் அணி தெரிவித்தது. ஒரு வீரருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் அவருடன் தொடர்பில் இருந்த 3 வீரர்களும் தனிமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

இந்நிலையில் தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் டேவிட் வில்லி. 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு டி20 பிளாஸ்ட் போட்டியில் மீண்டும் விளையாட வில்லி உள்ளிட்ட நான்கு வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும். 

ஜேசன் ராய்க்குப் பதிலாக டேவிட் வில்லியைத் தேர்வு செய்ய தில்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணி விரும்பியது. ஆனால், டி20 பிளாஸ்ட் போட்டியின் கடைசிப் பகுதியில் யார்க்‌ஷைர் அணிக்குத் தலைமை தாங்குவதற்காக அந்த வாய்ப்பை வில்லி தவிர்த்தார். சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதைப் பெற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.