ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-சீனாவின் இங்இங் டூயன் ஜோடி முதல் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறியது.
இந்த ஜோடி 4-6, 4-6 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் பெத்தானி மடேக் சேன்ட்ஸ்-இங்கிலாந்தின் ஜேமி முா்ரே ஜோடியிடம் தோல்வி கண்டது.
இதேபோல் ஆடவா் இரட்டையா் பிரிவில் ஜப்பானின் பென் மெக்லேக்லேனுடன் இணைந்து விளையாடினாா் போபண்ணா. அதிலும் போபண்ணா ஜோடி முதல் சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் திவிஜ் சரண், அங்கிதா ரெய்னா ஆகியோரும் தங்களுடைய பிரிவில் முதல் சுற்றோடு ஏற்கெனவே வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









