ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இந்த நாள் இந்தியாவுக்கான நாள்: 2-ம் நாள் முடிவில் 249 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :14 பிப்ரவரி 2021, 11:05 am

DIN


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, 195 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன ஷுப்மன் கில் இந்த இன்னிங்ஸில் ரன் கணக்கைத் தொடங்கினார். எனினும், அவரால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 14 ரன்கள் எடுத்திருந்த போது ஜேக் லீச் சுழலில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, ரோஹித்துடன் புஜாரா இணைந்தார். இந்த இணை ஆட்டநேரம் முடியும் வரை விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது.

2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்து 249 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

ரோஹித் 25 ரன்களுடனும், புஜாரா 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.