மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆஸி. ஓபன் தகுதிச்சுற்று: அங்கிதா முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்

News image
Updated On :12 ஜனவரி 2021, 8:51 pm

DIN

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். அதநேரத்தில் இந்திய வீரா் ராம்குமாா் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியுள்ளாா்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போா்னில் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான மகளிா் தகுதிச்சுற்று போட்டி துபையில் நடைபெற்று வருகிறது.

இதில், இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தனது 2-ஆவது சுற்றில் 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் உக்ரைனின் கேத்தரினா ஜவட்ஸ்காவை வீழ்த்தி இறுதிச்சுற்றான 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.

ஆடவா் தகுதிச்சுற்று கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரா் ராம்குமாா் தனது 2-ஆவது சுற்றில் 3-6, 2-6 என்ற நோ் செட்களில் சீன தைபேவின் டங் லின் ஊவிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.