கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

காயத்திலிருந்து மீண்டு, டி20 ஆட்டத்தில் விளையாடும் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் ஸ்டோக்ஸ் பங்கேற்கவில்லை.

Published On :

காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ், டி20 ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தாா் பென் ஸ்டோக்ஸ். ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது, பஞ்சாப் வீரா் கிறிஸ் கெயில் அடித்த பந்தை பென் ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்தாா். அப்போது அவருடைய இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து அவருக்கு எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், காயம் உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 3 மாதங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதனால் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் ஸ்டோக்ஸ் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட தயாராகிவிட்டார் ஸ்டோக்ஸ். தற்போது பந்துவீசவும் பயிற்சிகள் மேற்கொள்ளவும் அவரால் முடிகிறது. இதனால் அடுத்த வாரம் நடைபெறவுள்ள டி20 பிளாஸ்ட் ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் பங்கேற்கவுள்ளார். இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஸ்டோக்ஸ் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.