இலக்கை விரட்டும்போது தொடர்ச்சியாக 10 அரை சதங்கள்: இந்திய வீராங்கனை மந்தனா உலக சாதனை!
ஆடவர், மகளிர் என இரு தரப்பு கிரிக்கெட் ஆட்டங்களிலும் வேறு யாரும் இந்தச் சாதனையை நிகழ்த்தியதில்லை.


இலக்கை விரட்டும்போது தொடர்ச்சியாக 10 அரை சதங்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வென்றுள்ளது. லக்னௌவில் இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லாரா குட்ஆல் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் ஜூலான் கோஸ்வாமி 4 விக்கெட்டுகளையும் ராஜேஸ்வரி 3 விக்கெட்டுகளையும் மன்சி ஜோஷி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதையடுத்து விளையாடிய இந்திய மகளிர் அணி இலக்கை எளிதாக விரட்டி வெற்றியடைந்தது. 28.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை மந்தனா 64 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 80 ரன்களும் பூனம் ராவுத் 62 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இந்த ஆட்டத்தில் அரை சதமெடுத்த ஸ்மிரிதி மந்தனா, இலக்கை விரட்டும்போது தொடர்ச்சியாக 10 அரை சதங்கள் எடுத்துள்ளார். ஆடவர், மகளிர் என இரு தரப்பு கிரிக்கெட் ஆட்டங்களிலும் வேறு யாரும் இந்தச் சாதனையை நிகழ்த்தியதில்லை.
ஒருநாள் ஆட்டத்தில் இலக்கை விரட்டும்போது மந்தனாவின் கடைசி 10 இன்னிங்ஸ் ரன்கள்
80* (சமீபத்திய ஆட்டம்)
74
63
90*
105
73*
53*
86
52
57
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...