ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

கரோனா பாதிப்பு: இரு வார இடைவெளியில் தாய், சகோதரியை இழந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை

கரோனாவால் தாயை இழந்த அடுத்த இரு வாரத்தில் சகோதரியையும் இழந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனையான வேதா கிருஷ்ணமூர்த்தி.

News image

வேதா கிருஷ்ணமூர்த்தி

Updated On :6 மே 2021, 5:45 pm IST

கரோனாவால் தாயை இழந்த அடுத்த இரு வாரத்தில் சகோதரியையும் இழந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனையான வேதா கிருஷ்ணமூர்த்தி.

இந்திய அணிக்காக 48 ஒருநாள், 76 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் வேதா கிருஷ்ணமூர்த்தி. கடைசியாகக் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் விளையாடினார். 

வேதாவின் தாய் தேவி (67), இரு வாரங்களுக்கு முன்பு கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் வேதாவின் சகோதரி வத்சலாவும் (42) கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் வேதாவின் தந்தை, சகோதரர், 2-வது சகோதரி எனப் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். சில வாரங்களுக்கு முன்பு ஊருக்குச் சென்று குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு பெங்களூருக்குத் திரும்பினார் வேதா. கரோனாவால் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதால் பரிசோதனை செய்துகொண்டார். அதில் கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்தது. 

இரு வார இடைவெளியில் தாய், சகோதரியை இழந்த வேதாவுக்குப் பலரும் சமூகவலைத்தளங்கள் வழியாக ஆறுதல்களைத் தெரிவித்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.