25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கரோனா பாதிப்பு: இரு வார இடைவெளியில் தாய், சகோதரியை இழந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை

கரோனாவால் தாயை இழந்த அடுத்த இரு வாரத்தில் சகோதரியையும் இழந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனையான வேதா கிருஷ்ணமூர்த்தி.

வேதா கிருஷ்ணமூர்த்தி

Published On :28 ஜனவரி 2024, 1:40 am IST

கரோனாவால் தாயை இழந்த அடுத்த இரு வாரத்தில் சகோதரியையும் இழந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனையான வேதா கிருஷ்ணமூர்த்தி.

இந்திய அணிக்காக 48 ஒருநாள், 76 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் வேதா கிருஷ்ணமூர்த்தி. கடைசியாகக் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் விளையாடினார். 

வேதாவின் தாய் தேவி (67), இரு வாரங்களுக்கு முன்பு கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் வேதாவின் சகோதரி வத்சலாவும் (42) கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் வேதாவின் தந்தை, சகோதரர், 2-வது சகோதரி எனப் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். சில வாரங்களுக்கு முன்பு ஊருக்குச் சென்று குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு பெங்களூருக்குத் திரும்பினார் வேதா. கரோனாவால் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதால் பரிசோதனை செய்துகொண்டார். அதில் கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்தது. 

இரு வார இடைவெளியில் தாய், சகோதரியை இழந்த வேதாவுக்குப் பலரும் சமூகவலைத்தளங்கள் வழியாக ஆறுதல்களைத் தெரிவித்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.