நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி வியாழக்கிழமை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 

News image

படம்: ட்விட்டர் | முகமது ஷமி

Updated On :27 மே 2021, 3:45 pm

DIN


இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி வியாழக்கிழமை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 

சௌதாம்ப்டனில் ஜூன் 16-ம் தேதி தொடங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடவுள்ள முகமது ஷமி தற்போது 14 நாள்கள் தனிமையில் உள்ளார். இந்த நிலையில், அவர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட அவர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய அணியில் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதல் ஆளாக மார்ச் முதல் வாரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதையடுத்து, கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே, சேத்தேஷ்வர் புஜாரா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஜாஸ்பிரீத் பூம்ரா மற்றும் ரிஷப் பந்த் உள்ளிட்டோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்களது முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.  

வீரர்கள் அனைவரும் இரண்டாவது தவணை தடுப்பூசியை பிரிட்டனில் வைத்து செலுத்திக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.