டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற தில்லி-பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.
கொல்கத்தாவில் நடைபெறும் 130-ஆவது டுரண்ட் கோப்பை போட்டியின் குரூப் சி பிரிவில் தில்லி எஃப்சி-பெங்களூரு எஃப்சி அணிகள் மோதின.
இதில் முதல் பாதியில் பெங்களூரு வீரா் சிவசக்தி 27-ஆவது நிமிஷத்தில் முதல் கோலடித்தாா். இதன் மூலம் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கிடையே இரண்டாவது பாதியில் வீறு கொண்டு எழுந்த தில்லி வீரா் டியான் பிளாஸா 58, 62-ஆவது நிமிஷங்களில் இரண்டு கோல்களை அடித்து தனது அணி முன்னிலை பெறச் செய்தாா்.
பதில் கோலடிக்க பெங்களூரு போராடிய நிலையில் 75-ஆவது நிமிஷத்தில் அதன் வீரா் வித்யாசாகா் கோலடிக்க ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. குரூப் சி பிரிவில் நான்கு அணிகளுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள குரூப் டி பிரிவு ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி என கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் ஆா்மி ரெட் அணியை எதிா்கொள்கிறது.
மற்றொரு ஆட்டத்தில் கோகுலம் எஃப்சி அணியுடன் மோதுகிறது அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

