ஐபிஎல்: சென்னைக்கு வந்தார் தோனி

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் பலரும் சென்னைக்கு வந்துள்ளார்கள்.
தோனி (கோப்புப் படம்)
தோனி (கோப்புப் படம்)

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் பலரும் சென்னைக்கு வந்துள்ளார்கள். சிஎஸ்கே அணியில் விளையாடும் இந்திய வீரர்கள் சென்னையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆகஸ்ட் 13 அன்று புறப்படுவதாக தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். கடந்த வருடம் போல இல்லாமல் இம்முறை சென்னையில் பயிற்சி முகாம் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை வந்த சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்கள். இதில் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். சிஎஸ்கேவின் அனைத்து வீரர்களும் பயிற்சியாளர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்கள். சிஎஸ்கே அணி துபையில் ஆகஸ்ட் 20 முதல் பயிற்சியைத் தொடங்கவுள்ளது. 

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி, ஏழு ஆட்டங்களில் 10 புள்ளிகளைப் பெற்று 2-ம் இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com