ஐபிஎல் போட்டியிலிருந்து சில வீரர்கள் விலகியுள்ளதால் புதிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள சில வீரர்கள் மறுத்துள்ளதாலும் காயம் காரணமாகவும் புதிய வீரர்களை அணிகள் தேர்வு செய்துள்ளன.
இதுவரை ஐபிஎல் அணிகள் யாருக்குப் பதிலாக யாரைத் தேர்வு செய்துள்ளன என்கிற விவரம்:
ஸாம்பாவுக்குப் பதிலாக ஹசரங்கா (ஆர்சிபி)
சாம்ஸுக்குப் பதிலாக சமீரா (ஆர்சிபி)
ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக கார்டன் (ஆர்சிபி)
ஃபின் ஆலனுக்குப் பதிலாக டிம் டேவிட் (ஆர்சிபி)
டைக்குப் பதிலாக ஷம்சி (ராஜஸ்தான்)
ஆர்ச்சருக்குப் பதிலாக கிளென் பிலிப்ஸ் (ராஜஸ்தான்)
மெரிடித்துக்குப் பதிலாக எல்லீஸ் (பஞ்சாப்)
ஜை ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக அடில் ரஷித் (பஞ்சாப்)
கம்மின்ஸுக்குப் பதிலாக செளதி (கேகேஆர்)