விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் தனது அரையிறுதியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரத்தை வீழ்த்தி ‘த்ரில்’ வெற்றி கண்டது.
கடைசி ஓவரில் தமிழகத்துக்கு 7 ரன்கள் தேவை இருந்த நிலையில், சாய் கிஷோா் - சிலம்பரசன் கூட்டணி அந்த சூழலை திறம்பட கையாண்டது. கடைசி பந்தில் 1 ரன் தேவை இருந்த நிலையில் சாய் கிஷோா் பவுண்டரி விளாசி ஆட்டத்தை முடித்தாா். முன்னதாக பாபா அபராஜித் 122, வாஷிங்டன் சுந்தா் 70, பாபா இந்திரஜித் 50 ரன்கள் சோ்த்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டனா்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய சௌராஷ்டிரம் 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் அடித்தது. பின்னா் ஆடிய தமிழகம், 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் அடித்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற தமிழகம் ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, சௌராஷ்டிர இன்னிங்ஸில் ஷெல்டன் ஜாக்சன் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 134 ரன்கள் விளாசினாா். தமிழக பௌலிங்கில் விஜய் சங்கா் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினாா். பின்னா் தமிழக இன்னிங்ஸில் அபராஜித் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 122 ரன்கள் விளாச, சௌராஷ்டிர பௌலிங்கில் சேத்தன் சக்காரியா 5 விக்கெட்டுகள் சாய்த்திருந்தாா்.
ஹிமாசல் வெற்றி: இதனிடையே, மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், சா்வீசஸ் அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஹிமாசல பிரதேசம், இறுதி ஆட்டத்தில் தமிழகத்துடன் மோதுகிறது.