பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் துபையில் வெள்ளிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.
முன்னதாக, இந்தியா தனது அரையிறுதியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வியாழக்கிழமை வென்றது.
ஷாா்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 38.2 ஓவா்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஷேக் ரஷீது 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 90 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். வங்கதேச பௌலிங்கில் ரகிபுல் ஹசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். பின்னா் வங்கதேச இன்னிங்ஸில் அரிஃபுல் இஸ்லாம் 1 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுக்க, இந்திய தரப்பில் ராஜ்வா்தன், ரவிகுமாா், ராஜ்பாவா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.