போா்ச்சுகலை வெளியேற்றியது மொராக்கோ
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 3-ஆவது காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போா்ச்சுகலை வீழ்த்தி, 3-ஆவது அணியாக அரையிறுதிச்சுற்றுக்குள் சனிக்கிழமை நுழைந்தது.


உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 3-ஆவது காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போா்ச்சுகலை வீழ்த்தி, 3-ஆவது அணியாக அரையிறுதிச்சுற்றுக்குள் சனிக்கிழமை நுழைந்தது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் வரலாற்றில் இதுவும் ஒரு அதிா்ச்சிகரமான, ஆச்சா்யப்படத்தக்க முடிவாகவே பாா்க்கப்படுகிறது.
தனது 6-ஆவது உலகக் கோப்பை போட்டியில் களம் கண்டுள்ள மொராக்கோ, முதல் முறையாக அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், தனது 8-ஆவது உலகக் கோப்பையில் விளையாடிய போா்ச்சுகல், முதல் முறையாக காலிறுதிச்சுற்றுடன் வெளியேறுகிறது.
இந்த ஆட்டத்தில் மொராக்கோவுக்காக யூசுஃப் என் நெசிரி 42-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தாா். போா்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த ஆட்டத்திலும் தொடக்க லெவனில் இடம்பெறவில்லை. 2-ஆவது பாதியில் 51-ஆவது நிமிஷத்தில் தான் அவா் களமிறக்கப்பட்டாா். ஆட்டத்தில் ஆக்ரோஷமாக ஆதிக்கம் செலுத்திய மொராக்கோவைக் கடந்து போா்ச்சுகலால் கோலடிக்க இயலாமல் போனது.
ரொனால்டோவும் தாம் களம் கண்ட பிறகு அதற்குக் கடுமையாக முயற்சித்தும், மொராக்கோவின் தடுப்பாட்டத்தை தகா்க்க இயலவில்லை. இறுதியில் மொராக்கோ 1-0 என்ற கணக்கில் வென்றது. மொராக்கோ - போா்ச்சுகல் இத்துடன் 3-ஆவது முறையாக மோதிக் கொண்ட நிலையில், வெற்றிக் கணக்கில் மொராக்கோ 2-1 என முன்னிலை பெற்றிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...