சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்த வீரருக்காக ஆர்சிபி அணி ஒதுக்கியுள்ள ரூ. 20 கோடி: ஆகாஷ் சோப்ரா

எந்த அணியும் யாருக்காகவும் ரூ. 20 கோடியை ஒதுக்கக் கூடாது.

News image
Updated On :2 பிப்ரவரி 2022, 11:04 am

DIN

ஐபிஎல் ஏலத்தில் ஷ்ரேயஸ் ஐயரைத் தேர்வு செய்ய ஆர்சிபி அணி ரூ. 20 கோடி ஒதுக்கியுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ளது.  இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். 10 அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஐபிஎல் 2022 ஏலத்தில் 590 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். ஏலப் பட்டியலில் உள்ள 590 வீரர்களில் 228 சர்வதேச வீரர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத  355 வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். ஏலப் பட்டியலில் 370 இந்திய வீரர்களும் 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள்.

ஏலப்பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் எந்தந்த வீரருக்கு அணிகள் அதிகமாகச் செலவு செய்யும் என்கிற விவாதங்கள் ஆரம்பித்துவிட்டன. இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ்  சோப்ரா, தனது யூடியூப் தளத்தில் கூறியதாவது:

ஏலம் சுவாரசியமாக இருக்கப் போகிறது. ஷ்ரேயஸ் ஐயர் எப்படியும் ரூ. 15-16 கோடிக்கு தேர்வாக வாய்ப்புண்டு. ஆர்சிபி அணி, ஷ்ரேயஸ் ஐயருக்காக ரூ. 20 கோடி ஒதுக்கியுள்ளதாக யாரோ என்னிடம் சொன்னார்கள். அடடா! எந்த அணியும் யாருக்காகவும் ரூ. 20 கோடியை ஒதுக்கக் கூடாது. ஏனெனில் அதற்கு மதிப்பு கிடையாது. இதனால் அணியில் சமநிலையற்ற சூழல் ஏற்படும். சிறந்த கேப்டன் உங்களிடம் இருந்தாலும் அணி மிகவும் பலவீனமாக இருக்கும் என்றார்.

ஷ்ரேயஸ் ஐயர், கடந்த வருடம் தில்லி அணியில் விளையாடினார். 2018, 2019, 2020 ஆகிய வருடங்களில் தில்லி அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் செயல்பட்டார். 2019-ல் தில்லி அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது. 2020-ல் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது. கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியுள்ளதால் புதிய கேப்டனைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது ஆர்சிபி அணி. இதனால் ஷ்ரேயஸ் ஐயரை ஆர்சிபி அணி தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.