தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

15 ஐபிஎல் போட்டிகளிலும் இடம்பெற்ற ஒரே வெளிநாட்டு வீரர்

15 ஐபிஎல் போட்டிகளிலும் இடம்பெற்ற ஒரே வீரர் என்கிற பெருமையை மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த டுவைன் பிராவோ பெற்றுள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2022, 10:02 am

DIN

ஐபிஎல் போட்டி 2008-ல் தொடங்கியது. இதுவரை 14 போட்டிகள் நடைபெற்றுள்ளன.

கடந்த 14 போட்டிகளிலும் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் நான்கு வீரர்கள்தாம்.

ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில், ஷான் மார்ஷ், டுவைன் பிராவோ.

இந்த நால்வரில் டி வில்லியர்ஸ், கெயில், ஷான் மார்ஷ் ஆகிய மூவரும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. ஏலப் பட்டியலிலும் அவர்களின் பெயர் இல்லை.

இதனால் 15 ஐபிஎல் போட்டிகளிலும் இடம்பெற்ற ஒரே வீரர் என்கிற பெருமையை மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த டுவைன் பிராவோ பெற்றுள்ளார். இந்தமுறை ஏலப்பட்டியலில் பிராவோவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அடிப்படை விலை - ரூ. 2 கோடி. 

Story image

ஐபிஎல் போட்டியில் மும்பை, குஜராத், சென்னை ஆகிய அணிகளில் பிராவோ விளையாடியுள்ளார். ஏலத்தில் சிஎஸ்கே உள்பட பல அணிகள் பிராவோவைத் தேர்வு செய்ய ஆர்வம் காண்பிக்கும் எனத் தெரிகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.