இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா, இலங்கை இடையிலான முதல் டி20 ஆட்டம் லக்னௌவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியும் டாஸ் வென்றிருந்தால் பந்துவீச்சையே தேர்வு செய்திருக்கும் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, ஜாஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர். தீபக் ஹூடா அறிமுக ஆட்டக்காரராகக் களமிறங்குகிறார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜாஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சஹால்.