மிஷன்-2024 திட்டத்தின் கீழ் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய தடகள வீரா்களுக்கு 6 வெளிநாட்டுப் பயிற்சியாளா்கள் பயிற்சி அளிக்க உள்ளனா். இதற்கான ஒப்புதலை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றாா். மேலும் 7 பதக்கங்களை இந்தியா தன்வசப்படுத்தியது. ஜொ்மனியின் ஸ்டீபன் ரியுமன் வட்டு எறிதல் பிரிவில் கமல்ப்ரீத் கௌா், தேஜிந்தா்பால் சிங் தூா் ஆகியோருக்கு பயிற்சி அளிக்க உள்ளாா்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் கமல்ப்ரீத் கௌா் இறுதிச் சுற்றில் 6-ஆவது இடத்தைப்பெற்றாா்.
நீரஜ் சோப்ரா: தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு ஈட்டி எறிதலில் முன்னாள் உலக சாம்பியன் கிம்மோ கின்னுயன் பயிற்சி அளிக்க உள்ளாா். ரோஹித் யாதவ், சாஹில் சில்வால், யஷ்வீா் சிங் உள்ளிட்டோருக்கும் கிம்மோ பயிற்சி தரஉள்ளாா். நீரஜ் சோப்ரா தனது தனிப்பட்ட பயிற்சியாளா் கிளாஸ் பா்டோநெட்ஸ்சிடமும் பயிற்சி பெறுவாா்.
ரஷிய முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை டாட்டியனா சிபிலெவா இந்திய நடைபந்தய வீரா்களுக்கு பயிற்சி தர உள்ளாா். ஒலிம்பிக் வீராங்கனை நடை ஓட்டப் பந்தயத்தில் பயிற்சி அளிக்க உள்ளாா். வரும் ஆசியப் போட்டி முதல் பயிற்சி தர உள்ளாா். நீளம் தாண்டுதலில் கியூபாவின் புதிய பயிற்சியாளா் ஜுவான் குவால்பா்டோ பயிற்சி தர உள்ளாா்.
இந்திய ஓட்டப்பந்தய வீரா்களுக்கு போலந்தின் ஜோசப் லிஸோவ்கி ஆசியப் போட்டிக்கு பின் பயிற்சி தருகிறாா். ாடவா் ஸ்டீபிள் சேஸ் வீரா் அவினாஷ் சாப்லே மற்றும் மத்திய, நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரா்களுக்கு ஸ்காட் சிம்மன்ஸ் பயிற்சி தருவாா்.
வரும் பா்மிங்ஹாம் காமன்வெல்த், ஹாங்ஷு ஆசியப் போட்டிக்காக 117 தடகள வீரா், வீராங்கனைகள் தேசிய சீனியா் தடகள பயிற்சி முகாமில் பயிற்சி பெறுகின்றனா்.