
சென்னையைச் சேர்ந்த 14 வது பரத் சுப்ரமணியம், செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆகியுள்ளார்.
இத்தாலியில் நடைபெற்ற வெர்கானி கோப்பை செஸ் போட்டியில் கலந்துகொண்ட பரத் சுப்ரமணியம், 6.5 புள்ளிகளுடன் 7-ம் இடம் பெற்றார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான மூன்றாவது தகுதியையும் இப்போட்டியின் முடிவில் அடைந்தார். 2500 எ.எல்.ஓ. புள்ளிகளை அடைந்ததால் இந்தியாவின் 73-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆகியுள்ளார் பரத் சுப்ரமணியம்.
இத்தாலி போட்டியில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய கிராண்ட்மாஸ்டரான லலித் பாபு, டை பிரேக்கர் மூலமாக போட்டியை வென்றார்.
தமிழ்நாடு செஸ் சம்மேளனத்தின் இணையத்தளத்தில் உள்ள தகவலின்படி பரத் சுப்ரமணியம், தமிழ்நாட்டின் 25-வது கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இந்தியாவில் உள்ள 73 கிராண்ட்மாஸ்டர்களில் 25 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அந்தளவுக்கு இந்திய செஸ்ஸில் தமிழகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.