கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ரஞ்சி கோப்பைப் போட்டி விவகாரம்: ரவிசாஸ்திரி கருத்து

ரஞ்சி கோப்பைப் போட்டியை நடத்தாமல் இருந்தால் இந்திய கிரிக்கெட் முதுகெலும்பில்லாததாக ஆகிவிடும் என...

News image
Updated On :28 ஜனவரி 2022, 7:53 am

DIN

ரஞ்சி கோப்பைப் போட்டியை நடத்தாமல் இருந்தால் இந்திய கிரிக்கெட் முதுகெலும்பில்லாததாக ஆகிவிடும் என இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா பரவல் தொடங்கியவுடன் இன்று வரை ரஞ்சி கோப்பைப் போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது பிசிசிஐ. எனினும் இம்முறை ரஞ்சி கோப்பைப் போட்டியை நடத்த உறுதியாக உள்ளது பிசிசிஐ. 

இந்த வருடம் ரஞ்சி கோப்பைப் போட்டியை இரு பகுதிகளாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. முதல் பகுதியில் லீக் ஆட்டங்களை நடத்திவிடுவோம். நாக் அவுட் ஆட்டங்கள் ஜுனில் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஞ்சி கோப்பைப் போட்டி தொடர்பாகத் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. ட்விட்டரில் அவர் கூறியதாவது:

இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக உள்ளது ரஞ்சி கோப்பைப் போட்டி. அதை நாம் உதாசீனப்படுத்த ஆரம்பிக்கும்போது இந்திய கிரிக்கெட் முதுகெலும்பில்லாததாக ஆகிவிடும் எனக் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.