ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிய ருத்துராஜ்
ருத்துராஜின் அசத்தல் அரை சதத்தின் காரணமாக இந்திய அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.


ருத்துராஜின் அசத்தல் அரை சதத்தின் காரணமாக இந்திய அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
துவக்க முதலே ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடி காட்டத் துவங்கினார். பந்துகளை நான்கு புறமும் சிதறடித்த ருத்துராஜ் 30 பந்துகளில் அரை சதம் அடித்தார். சர்வதேச போட்டிகளில் இது அவரது முதல் அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கிஷனும் தன் பங்குக்கு அதிரடி காட்டினார். இதன் காரணமாக 10 ஓவர்களில் இந்திய அணி குவித்தது. கேசவ் மகாராஜ் வீசிய 10வது ஓவர் இறுதி பந்தில் ருத்துராஜ் அவரிடமே கேட்ச் கொடுத்து இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...